Valais நகரசபைக்கு உட்பட்ட Leukerbad பகுதியில் அமைந்துள்ள ஹொட்டேலில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து ஹொட்டேலில் தங்கியிருந்த 17 பேர் கட்டடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
அவர்களில் 9 பேர் புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் காலில் எரிகாயம் அடைந்தார்.
அதிகாலை 5.10 மணியளவில் தீ முற்றாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.