Schwyz இல் பராகிளைடர் மின்கம்பிகளில் சிக்கி தீப்பற்றி எரிந்துள்ளது.
நேற்று மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
29 வயதுடைய பயிற்சி விமானி ஒருவரும், 31 வயதுடைய விமானியும் அந்த பராகிளைடரில் பயணம் செய்தனர்.
அது எதிர்பாராத வகையில் மின்சாரக் கம்பி இணைப்புகளில் சிக்கி தீப்பற்றி எரியத் தொடங்கியது.
உடனடியாக அதில் இருந்த இரண்டு பேரும் பாதிப்புகள் ஏதும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்.