பெர்னின், லாங்காஸ் மாவட்டத்தில் நேற்று வாகனம் ஒன்றில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
நேற்று இரவு 8.20 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய குற்றவாளியின் வாகனம் தெரியாத திசையில் தப்பிச் சென்றுள்ளதாக பெர்ன் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
விரிவான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வாகனமோ அல்லது குற்றவாளிகளோ இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பொலிசார் மேலும் கூறினர்.
மூலம்- Bluewin