ஆர்காவ் கன்டோனில் உள்ள ஆப்ட்ரிங்கனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில்,பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆர்காவ் மாகாண காவல்துறை மற்றும் சூரிச் தடயவியல் நிறுவனத்தின் நிபுணர்கள், தீயணைப்புத் துறை மற்றும் அம்புலன்ஸ் விரைந்து சென்று, . அடுக்குமாடி கட்டடத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதுடன் அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.
குற்றவியல் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன
33 வயது குடியிருப்பாளர் ஒருவர் இரசாயனங்களைப் பரிசோதித்து வெடிக்கும் கலவையை உருவாக்கியதாகத் தெரிய வருகிறது.
கன்டோனல் காவல்துறை விசாரணையை நடத்தி வருகிறது.
மூலம்- 20min.