மெய்ர்சால்ப் நோக்கி இன்று அதிகாலை மண் வீதியில் சென்று கொண்டிருந்த கார், வலது பக்கத்தில் உள்ள ஒரு கல் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து, கார் வீதியின் இடது பக்கத்தில் சாய்ந்து செங்குத்தான சரிவில் விழுந்துள்ளது.
ஓட்டுநர் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில், கார் கீழே உள்ள ஒரு காட்டுப் பகுதியில் தொங்கிக் கொண்டிருந்தது.
இந்த விபத்தில் ஓட்டுநர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் லூசெர்ன் மாகாணத்தில் வசிக்கும் 65 வயது சுவிஸ் நபர் என்றும், விபத்துக்கான காரணமும் சரியான நேரமும் தற்போது தெளிவாகத் தெரியவில்லை என்றும் சென் காலன் கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min