சலூன்கள், சிற்றுண்டிச் சாலைகள், கபாப் கடைகள் போன்றவற்றில் விரைவில், பணப் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சுவிட்சர்லாந்தில் பணத்தை மோசடி செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் அதிகரித்து வருகின்றன.
பணமோசடி அறிக்கையிடல் அலுவலகம் (MROS) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை அறிக்கைகளின் எண்ணிக்கை 27.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தப் பிரச்சினை பெர்னில் உள்ள மத்திய அரசாங்கத்திற்கு கவலை அளிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த நிலையில், மைய-வலதுசாரி தேசிய கவுன்சிலர் மார்ட்டின் கேண்டினாஸ், ஃபெடரல் கவுன்சில் எவ்வாறு இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
மாஃபியா கட்டமைப்புகள் நெயில் சலூன்கள், பீட்சா டெலிவரி சேவைகள், ஷிஷா பார்கள், முடிதிருத்தும் கடைகள் மற்றும் பபிள் டீ கடைகள் போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை மோசடி செய்கின்றன.
அத்தகைய வணிகங்களில் தற்காலிகமாக பணப் பயன்பாட்டைத் தடை செய்வது இதற்கான தீர்வாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த யோசனையை சுவிஸ் அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மூலம்- 20min