22.6 C
New York
Sunday, June 29, 2025

பெர்ன் பல்கலைக்கழகத்தில் பலஸ்தீனம் குறித்த நிகழ்வுக்கான அனுமதி ரத்து.

பெர்ன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பலஸ்தீன விவகாரம் தொடர்பான குழுநிலை விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் அதன் வளாகத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை  மீளப் பெற்றுள்ளது என்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.

நாளை திங்கட்கிழமை இந்த நிகழ்வுக்கான முன்பதிவு செய்யப்பட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிரதேசத்தில் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் இந்த நிகழ்வில் பங்கேற்கவிருந்தார்.

நிகழ்வு சமநிலையில் இருப்பதை உறுதி செய்ய முடியாதிருப்பதாக,  பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செய்தித் தொடர்பாளர் பீட் கெர்பர் இந்த விமர்சனத்தை நிராகரித்தார்.

அல்பானீஸ் ஒரு சுயாதீன மனித உரிமை நிபுணர், அவர் பலஸ்தீன பிரதேசங்களின் நிலைமைக்கு ஆதரவாக தெளிவாகப் பேசுகிறார் என்று அவர் கூறினார்.

வெளியில் இருந்து வந்த அழுத்தத்தின் கீழ் பல்கலைக்கழகம் பின்வாங்கியதாகத் தெரிகிறது என்றும் கெர்பர் கூறினார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles