0.6 C
New York
Friday, February 13, 2026

பாசலில் நகைக்கடையில் கொள்ளை.

பாசலில் உள்ள கிளாராஸ்ட்ராஸில் உள்ள ஒரு நகைக் கடையில் இன்று அதிகாலை கொள்ளை இடம்பெற்றுள்ளது.

கடையில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்த ஊழியர் ஒருவர், சேதத்தின் அளவு இன்னும் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாலை 3:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடையின் முன் ஒரு பெரிய பகுதியை பொலிசார் சுற்றி வளைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

மூலம்- 20min,

Related Articles

Latest Articles