டுபாய் விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் களஞ்சியம் ட்ரோன் தாக்குதலை அடுத்து, தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயை கட்டுக்குள் கொண்டுவர அவசர சேவைகள் செயல்பட்டு வருவதாக எமிரேட் அதிகாரிகள் X தளத்தில் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, காயங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் – மற்றும் தீயின் அளவு – உடனடியாக கிடைக்கவில்லை.
அதேவேளை இன்று அதிகாலை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக “Flightradar” தெரிவித்துள்ளது. பல விமானங்கள் விமான நிலையத்தைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
மூலம்- 20min

