சூரிச் விமான நிலையம் நேற்று வீசிய கடும் புயலால் பாதிக்கப்பட்டது.
பலத்த காற்று காரணமாக, மிலனில் இருந்து வந்த ஒரு விமானம் கடைசி நிமிடத்தில் தரையிறங்குவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பின்னர் விமானம் திருப்பி விடப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து குளோட்டனில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
நேற்று மாலை 4:30 மணியளவில் சுமார் 25 நிமிடங்கள் விமானங்களை கையாளுவது நிறுத்தப்பட்டதாக சூரிச் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர், உறுதிப்படுத்தினார்.
இதன்போது, பிரஸ்ஸல்ஸ், லண்டன் மற்றும் பலெர்மோவிலிருந்து வந்த சுவிஸ் விமானங்கள் மற்றும் மார்சேயில் இருந்து வந்த ஹெல்வெடிக் விமானம் உட்பட மொத்தம் நான்கு விமானங்கள் தெற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்ருட்கார்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
நேற்று மாலை வானிலை காரணமாக எடெல்வைஸ் மற்றும் சுவிஸ் உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் சேவைகளில் தாமதங்கள் மற்றும் ரத்துகள் ஏற்பட்டன.
குளோட்டனில் தரையிறக்கங்கள் மாலை 5 மணியளவில் மீண்டும் தொடங்கப்பட்டன.
மூலம்- 20min