சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் கடும் காற்று, இடியுடன் கூடிய மழையினால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
சில இடங்களில் 140 கிலோ மீற்ற வேகத்தில் காற்று வீசியது.
இதனால் மரங்கள் முறிந்து விழுத்தன. ஏரிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் நீரில் மூழ்கியதுடன் பல படகுகள் இழுத்துச் செல்லப்பட்டன.
கூடாரங்களும் தற்காலிக கொட்டகைகளும் காற்றில் சேதம் அடைந்தன.
மரம் முறிந்து விழுந்து ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
இந்த மோசமான வானிலை குறித்து ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த து.
மூலம்- 20min