பெர்னீஸ் ஜூராவில் உள்ள மல்லேரேயில், சனிக்கிழமை இரவு 8 மணியளவில் ஒரு சட்டவிரோத ரேவ் இசை விருந்தை தடுக்கச் சென்ற பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்ற சட்டவிரோத ரேவ் நிகழ்ச்சியை நிறுத்த பொலிசார் முயன்ற போது நடத்தப்பட்ட தாக்குதலில், இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் மற்றொருவரும் காயமடைந்தனர்.
இசை அமைப்பை பறிமுதல் செய்ய முயன்றபோது, அங்கிருந்தவர்களால் பொலிஸ் அதிகாரிகள் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக பெர்ன் கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.
அவர்கள் இரும்பு கம்பிகள், போத்தல்கள், மரம் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளால் தாக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பொலிசார் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி அவர்களை தடுத்தனர்.
இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பொலிஸ் வாகனங்களும் சேதமடைந்தன. டயர்கள் வெட்டப்பட்டன, ஜன்னல்கள் உடைக்கப்பட்டன, வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக கணிசமான சேதம் ஏற்பட்டது.
பல நூறு பேர் ரேவ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர், ஒரு கட்டத்தில் இந்த எண்ணிக்கை 2,000 வரை இருந்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்த இரண்டு பெண் பொலிசாரில் ஒருவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது, மற்றொருவருக்கு சில காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
மூலம்- bluewin