டிசினோவில் வெள்ளிக்கிழமை மதியம் முதல் புதன்கிழமை மாலை வரை வெப்ப எச்சரிக்கை அமுலில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சனிக்கிழமை முதல் ஜெனீவா மற்றும் வாட் ஆகிய இடங்களில் வெப்ப எச்சரிக்கை அமுலில் இருக்கும்.
வானிலை மற்றும் காலநிலைக்கான கூட்டாட்சி அலுவலகம் (மீடியோஸ்விஸ்) நிலை 3 வெப்ப அலையை எதிர்பார்க்கிறது.
அதாவது குறைந்தபட்சம் மூன்று தொடர்ச்சியான நாட்களில் சராசரி வெப்பநிலை 25 டிகிரிக்கு மேல் இருக்கும்.
வாட்டில், வீடுகளுக்குச் சென்று தொலைபேசி அழைப்புகள் மூலம் பாதிக்கப்படக் கூடிய மக்களை தொடர்ந்து கண்காணிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கன்டோன் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மக்கள் தங்கள் நடத்தையை அதற்கேற்ப மாற்றியமைக்குமாறு டிசினோ அதிகாரிகள் ஒரு அறிக்கையில், அழைப்பு விடுத்துள்ளனர்.
வெப்பமான நேரங்களில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைக்கவும், அதிகப்படியான சூரிய ஒளியைத் தவிர்க்கவும், நிறைய தண்ணீர் குடிக்கவும் அவர்கள் கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
மதுபானங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo