பெர்ன் மாகாணத்தில் உள்ள வைல்டர்ஸ்வில்லில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில், ஒன்பது பேர் காயமடைந்தனர்.
வைல்டர்ஸ்வில்லில் உள்ள டாங்கல்ஸ்டட்ஸில் இன்று அதிகாலை 2:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒரு ஓட்டுநர் ஸ்வைலுட்ஷினனில் இருந்து வைல்டர்ஸ்வில் நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, எதிரே வந்த ஒரு காருடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் 9 பேர் காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று பெர்ன் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
மூலம்- swissinfo