Hendschiken இல் உள்ள பெட்ரோல் நிலைய கடையில் பணத்தைக் கொள்ளையடித்தவர் சில மணித்தியாலங்களுக்குள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 5 மணியளவில் இந்த கொள்ளை இடம்பெற்றது.
பணத்தைக் கொள்ளையடித்தவர் தப்பிச் சென்ற நிலையில் உடனடியாக பொலிஸ் ரோந்து அணிகள் உசார்படுத்தப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன.
கொள்ளையில் ஈடுபட்டவர் பற்றி வெளிப்படுத்தப்பட்ட அடையாளங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலை அடுத்து. இரவு 8 மணியளவில் 43 வயதுடைய சந்தேக நபர் Aargau கன்டோனல் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூலம்- 20min.