சூரிச் , பேர்ன் மற்றும் சுவிட்சர்லாந்தின் மத்திய பகுதியில், நேற்று மாலை கடும் புயற்காற்று, இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது.
இந்த கடும் புயலினால், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இதனால் வீடுகளின் மீதும், வீதிகளிலும் மரக் கிளைகள் காணப்படுகின்றன.சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
நேற்றிரவு 9 மணி வரை இந்தப் புயலுடன் கூடிய வானிலை இருக்கும் என்றும் 3ஆம் நிலை ஆபத்து உள்ளதாகவும் சுவிஸ் வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
மூலம்- 20min