2025 ஆம் ஆண்டில் சுவிஸ் பெடரல் ரயில்வே சாதனை அளவாக 1.43 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.
சுமார் 20,000 கட்டுமான தளங்களில் பணிகள் நடைபெற்று வந்த போதிலும், கடந்த ஆண்டு, 94.1% ரயில்கள் சரியான நேரத்தில் இயங்கப்பட்டுள்ளன. இது 2024 இல் 93.2% ஆக இருந்தது.
தேவை அதிகரித்துள்ள நிலையில், இயக்க, பராமரிப்பு மற்றும் எரிசக்தி செலவுகளும் அதிகரித்துள்ளன. ஃபெடரல் ரயில்வே அதன் சரக்கு வணிகத்திலிருந்து வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
நிறுவனம் 496 மில்லியன் பிராங் லாபத்தை ஈட்டியது, இது 2024 இல் பதிவு செய்யப்பட்ட 275 மில்லியன் பிராங் இலாபத்தை விட கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். இருப்பினும், இந்த அதிகரிப்பு அதன் கடனைக் குறைக்க உதவாது என்றும் பெடரல் ரயில்வே தெரிவித்துள்ளது.
மூலம்- swissinfo

