லூசெர்ன் மாகாணத்தின் ஹோக்டோர்ஃப் பகுதியில், திங்கட்கிழமை போதைப்பொருள் உட்கொண்டிருந்த ஓட்டுநர் ஒருவர் காவல்துறை வாகனம் ஒன்றின் பின்புறத்தில் மோதினார்.
அவருக்கு நடத்தப்பட்ட விரைவு போதைப்பொருள் சோதனையில், அவர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது உறுதியானதாக லூசெர்ன் காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
42 வயதான அந்த நபருக்கு இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவரது ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டது.
சொத்து சேதத்தின் மதிப்பு 15,000 பிராங் என காவல்துறை மதிப்பிட்டுள்ளது.
மூலம்- swissinfo

