3.8 C
New York
Sunday, March 29, 2026

சர்வதேச சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை சுவிஸ் உறுதிப்படுத்த வேண்டும்- ஐசிஆர்சி

சர்வதேச சட்டத்தை நடைமுறைப்படுத்த சுவிட்சர்லாந்து தனது முழுமையான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) தலைவர் மிர்ஜானா ஸ்போல்ஜாரிக், அழைப்பு விடுத்துள்ளார்.

இதுவே தனது சொந்த மக்களின் பாதுகாப்பைப் பேணுவதற்கான மிகவும் பயனுள்ள வழி என்றும் அவர் கூறியுள்ளார்.

“இன்றைய உலகில் வெறுமனே தடுமாறிக் கொண்டிருப்பது போதாது, உலகம் ஒரு திருப்புமுனையில் இருக்கிறது, தெளிவு தேவைப்படுவதாகவும் அவர் எச்சரித்தார்.

“சுவிட்சர்லாந்து ஒரு திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடு, வலுவான சட்ட ஆட்சியைக் கொண்டுள்ளது, அதற்காக மதிக்கப்படுகிறது, அந்த நாடு “சர்வதேச சட்டத்திற்கு தயக்கமின்றி அர்ப்பணிப்புடன் இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

நாட்டின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள், தாங்கள் உள்நாட்டில் கடைப்பிடிக்கும் கொள்கைகளை வெளிநாடுகளிலும் செயல்படுத்த வேண்டும் . “இரட்டைத் தரநிலைகள் அனைவரின் பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்கும், சட்டத்தை மீறுபவர் யாராக இருந்தாலும், அது சட்ட மீறல்தான் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“ஒரு மனித உயிருக்கு எல்லா இடங்களிலும் ஒரே மதிப்பு உண்டு; ஒரு குழந்தை எல்லா இடங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும்.” இந்தக் கொள்கை சுவிஸ் அரசியலமைப்பிலும் பொதிந்துள்ளது. அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

பிப்ரவரி 28 அன்று ஈரானில் போர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, போரின் விதிகளை மதிக்குமாறு அனைத்துத் தரப்பினருக்கும் ஐ.சி.ஆர்.சி. வேண்டுகோள் விடுத்தது.

ஈரான் மீதான தாக்குதலின் போது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டனவா என்று கேட்கப்பட்டபோது, ​​ஸ்போல்ஜாரிக் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

மக்கள் இடம்பெயர்வுகள் மற்றும் மருத்துவமனைகள், பள்ளிகள் மீதான தாக்குதல்கள் நடந்துள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.

“தற்போதைய மத்திய கிழக்கு மோதலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் அகதிகளின் பாதுகாப்பு போன்ற அடிப்படைக் கொள்கைகள் மீறப்படுகின்றன.” ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த அமைப்பு, மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.

நான்கு வாரப் போருக்குப் பிறகு, ஏவுகணைத் தாக்குதல்கள், அழிவு மற்றும் பரவலான பாதுகாப்பின்மை ஆகியவை ஈரான், லெபனான், இஸ்ரேல் மற்றும் பல வளைகுடா நாடுகளைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன.

ஈரானுடன் ஒரு உடன்பாடு எட்டப்படும் என்ற நம்பிக்கையை அமெரிக்காவிடமிருந்து சமீபத்தில் கிடைத்த சமிக்ஞைகள் அளித்திருந்தாலும், அமைதி என்பது இன்னும் தொலைவில்தான் உள்ளது என ஸ்போல்ஜாரிக் எச்சரித்தார்.

“போரின் தற்போதைய போக்கு, பேச்சுவார்த்தைகளுக்கான கட்டமைப்பைச் சிதைத்து வருகிறது,” என்று அவர் கூறினார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles