Villnachernவில் உள்ள Dorfstrasse உள்ள ஒரு வீடு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் இன்று அதிகாலை 3 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது.
காரில் பற்றிய தீ மளமளவென கட்டடத்தில் வேகமாக பரவியது.
ஏராளமான தீயணைப்பு படையினர், வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
விடியற்காலை வரை தீயை அணைக்கும் பணி இடம்பெற்றது.
வீட்டில் இருந்த 6 பேர் தூக்கத்தில் இருந்து எழும்பி ஓடியதால், காயமின்றித் தப்பினர்.
அந்தக் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. வீடும் பெருமளவில் சேதமடைந்தது.
ஆர்காவ் கன்டோனல் பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மூலம் -20min

