சுவிட்சர்லாந்தில் சுமார் 30,000 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகியுள்ளனர்.
இது குழந்தைகள் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவத்திற்கான தலைமை மருத்துவர்களின் சங்கத்தின் மதிப்பீடாகும்.
மொத்தம் 300,000 பதின்வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் சிக்கல்களை எதிர்கொள்ளுகின்றனர்.
அவர்கள் ஒரு நாளைக்கு எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரங்களை தங்கள் ஸ்மார்ட்போன்களில் செலவிடுகிறார்கள்.
14 வயது சிறுவன் தனது திரையில் தினமும் எட்டு மணி நேரம் அல்லது அதற்கு மேல் செலவிடுகிறான்.
5 அல்லது 16 மணிநேரம் செலவழிக்கின்றவர்களும் இருக்கிறார்கள். இது அவர்களின் பெற்றோருக்கு ஒரு பிரச்சினையாக உள்ளது.
பாசலில் உள்ள பல்கலைக்கழக மனநல கிளினிக்குகளில் நடத்தை அடிமையாதல்களில் நிபுணத்துவம் பெற்ற மனநல மருத்துவரான மார்ட்டின் மேயர், இதற்கு மூன்று எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன எனக் கூறுகிறார்.
1. கட்டுப்பாட்டை இழத்தல்: அவர் அல்லது அவள் உண்மையில் விரும்பினாலும், இனி நிறுத்த முடியாது என்ற நிலை.
2. சேதம்: குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வாக்குவாதம், தூங்குவதில் சிக்கல் அல்லது பாடசாலையில் சிரமங்களை எதிர்கொள்வது
3. முன்னுரிமை: ஸ்மார்ட்போன் எல்லாவற்றையும் விட முக்கியமானது என்ற நிலை.
இந்த மூன்று புள்ளிகளும் சமூக ஊடக பயன்பாட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால், அது அடிமையாதலாக கருதப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம் – 20min