7.1 C
New York
Monday, December 29, 2025

அகதிகளின் குடும்பத்தினரை இணைக்க தடை- இடைநிறுத்தியது அரசுகளின் பேரவை.

தற்காலிக புகலிட அனுமதி வழங்கப்பட்டவர்களுடன் குடும்பத்தினர் மீள ஒருங்கிணைவதை தடை செய்யும் வகையில், சுவிற்சர்லாந்தின் தேசிய பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று அரசுகளின் பேரவையில் இந்த பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்ட போது, தற்போதைக்கு முடிவை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.

அடிப்படை உரிமைகள் பிரச்சினைகள் எழுவதால், பொறுப்பான குழு முதலில் பிரச்சினையை இன்னும் விரிவாக ஆராய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று தேசிய கவுன்சிலின் முடிவைத் தொடர்ந்து, எஸ்.வி.பி கட்சியின் முன்மொழிவுக்கு எதிராக 100,000 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கையெழுத்துகளை எஸ்பி கட்சி ஒரே நாளில் சேகரித்துள்ளது.

அந்த முடிவை ஒத்திவைத்துள்ளதன் மூலம், சமூக ஜனநாயகவாதிகள் குறைந்தபட்ச வெற்றியைப் பெற்றுள்ளனர்.

மூலம் 20min

Related Articles

Latest Articles