Dufourstrasse இல் உள்ள Migrolino பெட்ரோல் நிலையத்தில், கொள்ளையிட்ட முகமூடிக் கொள்ளையன் கைது செய்யப்பட்டள்ளார்.
கடந்த 16ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
முகமூடி அணிந்த நபர் ஒருவர் அங்கிருந்த இரண்டு பெண் பணியாளர்களையும் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையிட்டுக் கொண்டு தப்பிச் சென்றார்.
இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட Thurgau காவல்துறையினர், 40 வயதான அந்தக் கொள்ளையனை நேற்றுக் கைது செய்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
மூலம்- 20min

