காம்பெலனில் உள்ள விட்ஸ்வில் சீர்திருத்த சிறைச்சாலையில், கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் அறையில் இறந்து கிடந்ததாக திங்கட்கிழமை காலை, 7:45 மணியளவில், பெர்ன் கன்டோனல் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அவசரகால பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு,அந்த நபரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரணத்திற்கான சரியான காரணம் தெரியவராத நிலையில், விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இறந்தவர் 42 வயதான இத்தாலிய குடிமகன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.