ஜெர்மனியின் Stuttgart நகரில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மக்கள் கூட்டத்துக்குள் கார் ஒன்று புகுந்த சம்பவத்தில், 46 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் 5.50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் 5 பேர் சிறுவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதுடைய ஜெர்மனியரே அவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவரவில்லை. எனினும் இது விபத்து தான் என்றும் பொலிசார் கூறியுள்ளனர்.
மூலம்- 20min.