சூரிச்சில் உள்ள Dietikon, இல் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட கொசோவா நாட்டவர் ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உகண்டாவைச் சேர்ந்த 56 வயதுடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மூலம்- 20min.