இடியுடன் கூடிய மழை குறித்த எச்சரிக்கையை சுவிஸ் அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளது. 4ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டிசினோவில் உள்ள மாகியா பள்ளத்தாக்கு மற்றும் வாலே லெவென்டினாவிலும், யூரி மாகாணத்தில் உள்ள உர்செரன் பள்ளத்தாக்கிலும் இப்போது “பெரிய ஆபத்து” உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலைஸில் உள்ள அப்பர் மேட்டர் பள்ளத்தாக்கு மற்றும் கிளாரஸ் மற்றும் கிராபுண்டனின் சில பகுதிகளுக்கும், “கணிசமான ஆபத்து” இருப்பதாக முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
பெர்னீஸ் ஓபர்லேண்ட் மற்றும் துர்காவ் இடையேயான பிற பகுதிகளில் “கணிசமான ஆபத்து” ஏற்படும் சாத்தியம் உள்ளது.
இடியுடன் கூடிய மழையிலிருந்து “குறிப்பிடத்தக்க ஆபத்து” இன்று சுவிட்சர்லாந்தின் பெரும்பகுதிகளை அச்சுறுத்தக் கூடும் என்று மத்திய அரசு எச்சரிக்கிறது.
மூலம்- bluewin