சுவிட்சர்லாந்தின் வேவி (Vevey) நகர மக்கள், ரயில் நிலையப் பகுதியில் கண்காணிப்பு கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், தெரு வியாபாரத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, அப்பகுதியில் 44 கமராக்களை நிறுவும் திட்டத்தை மக்கள் நிராகரித்துள்ளனர்.
இந்த கமராக்களை நிறுவுவதை 60.6% பேர் நிராகரித்துள்ளனர் (எதிர்த்து 3,008 வாக்குகள், ஆதரவாக 1,888). 36.4%. வாக்குகள் பதிவாகியுள்ளன.
உள்ளூர் நாடாளுமன்றம் மார்ச் மாதத்தில் இந்த கமெராக்களை பொருத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.
பின்னர் இந்த திட்டத்தை மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
மூலம்- swissinfo