23.5 C
New York
Thursday, September 11, 2025

நிறுத்தாமல் தப்பிச் சென்ற திருட்டு வாகனம் பேருந்துடன் மோதி விபத்து.

பொலிசார் நிறுத்தியபோது நிறுத்தாமல் தப்பிச் சென்ற வாகனம் பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பெர்ன் கன்டோனல் காவல்துறையினர், பெர்ன் கன்டோனில் உள்ள பீலில் உள்ள சீவோர்ஸ்டாட் ரவுண்டானா அருகே வியாழக்கிழமை நள்ளிரவு  சோதனையை நடத்தினர்.

இதன்போது, ஒரு விநியோக வாகன ஓட்டுநர் சோதனையைத் தவிர்க்க முயன்று தப்பிச் சென்ற போது,  போக்குவரத்து விபத்தை ஏற்படுத்தினார்.

விநியோக வாகனம், சீவோர்ஸ்டாட் வழியாக நகர மையத்தை நோக்கி அதிக வேகத்தில் தப்பிச் சென்ற போது. பொலிஸ் ரோந்துப் படையினர் உடனடியாக வாகனத்தைத் துரத்தத் தொடங்கினர்.

ஜேக்கப்-ரோசியஸ்-ஸ்ட்ராஸ் மற்றும் சீவோர்ஸ்டாட் சந்திப்பில், வாகனம் பீலர் வெர்கெர்ஸ்பெட்ரிப் பஸ் மற்றும் ஒரு கார் மீது மோதியது.

பின்னர் வாகனத்தில் இருந்த இருவரையும் துப்பாக்கி முனையில்  காவல்துறையினர் கைது செய்தனர்.

தப்பிச் சென்ற வாகனத்தில் பயணித்தவருக்கு லேசான காயம் ஏற்பட்டது, சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.

18 வயதுடைய இருவரும் தற்காலிகமாக கைது செய்யப்பட்டனர்.

“அவர்கள் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் என்று பெர்ன் கன்டோனல் காவல்துறை தெரிவித்தது.

அந்த வாகனமும்,  அதன் உரிமத் தகடுகளும் திருடப்பட்டவை என கண்டறியப்பட்டுள்ளது.

மூலம்-20min

Related Articles

Latest Articles