25 C
New York
Wednesday, July 23, 2025

கணவனைக் கொலை செய்த மனைவி.

சூரிச்சில் பெண் ஒருவர் தனது கணவனைக் கொலை செய்துள்ளார்.

திங்கட்கிழமை பிற்பகல், 69 வயதான சுவிஸ் பெண் ஒருவர் தனது குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொண்டு, முந்தைய நாள் மாலை தனது கணவரைக் கொலை செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மருத்துவர் கன்டோனல் பொலிசாருக்குத் தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்ட பொலிசார், 71 வயதான சுவிஸ் ஆணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

அந்தப் பெண் கைது செய்யப்பட்டு சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டார்.

சூரிச் தடயவியல் நிறுவனம் குற்றம் நடந்த இடத்தில் ஆதாரங்களைப் பெற்றதாக சூரிச் கன்டோனல் காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றத்திற்கு வழிவகுத்த சரியான சூழ்நிலைகள், குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles