33 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பாரிசில் நேற்றிரவு கோலாகலமாக ஆரம்பமாகின.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த வண்ணமயமான தொடக்க விழாவில், நேற்றிரவு 11 மணிக்கு முன்னதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஒலிம்பிக் போட்டிகளை ஆரம்பித்து வைப்பதாக அறிவித்தார்.
ஒலிம்பிக் சுடரை கால்பந்தாட்ட வீரர் Zinédine Zidane மற்றும் டென்னிஸ் வீரர் Raphael Nadal ஆகியோர் இறுதியாக ஏந்தி வந்தனர்.
தடகள வீரர் Marie-José Pérec மற்றும் ஜூடோகா Teddy Riner ஆகியோர் பாரிஸ் ஒலிம்பிக் சுடரை ஏற்றினர்.
அப்போது, நெருப்புக் கிண்ணம் பொருத்தப்பட்ட சூடான காற்று பலூன், பாரிஸ் இரவு வானத்தில் ஒளிர்ந்தபடி வானில் பறக்கவிடப்பட்டது.