Givisiez இல் இன்று அதிகாலை அடுக்குமாடி கட்டடத்தின் முன் வாசலில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
அடுக்குமாடி கட்டடத்தின் முன் கதவில் 67 வயது நபர் ஒருவர் பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதையடுத்து இன்று அதிகாலை 12.30 மணியளவில் அதிரடிப்படையினர் உள்ளிட்ட பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டனர்.
அவர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை, துப்பாக்கியுடன் கைது செய்தனர்.
அவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் பொலிஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மூலம் – Bluewin