ஜெனிவாவில் உள்ள Meyrin இல் நகைக்கடை ஒன்றில் ஆயுதமுனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகமூடி அணிந்த துப்பாக்கி நபர் ஒருவர், நகைக்கடைக்குள் நுழைந்து, இரண்டு ஊழியர்களை அச்சுறுத்தி அங்கிருந்த நகைகளை அள்ளிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
வாடிக்கையாளர்கள் முன்னிலையில் இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
குற்றவாளியை பொலிசார் தேடி வருகின்றனர்.