25.8 C
New York
Thursday, June 26, 2025

103 அகதிகளுடன் முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய மியான்மார் படகு

மியான்மார் நாட்டு அகதிகள் 103 பேருடன் படகு ஒன்று முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால்  மேற்கு கடற்கரைப் பகுதியில் தரைதட்டியுள்ளது.

கடும் காற்றினால் திசைமாறிய இந்தப் படகு இன்று முல்லைத்தீவுப் பகுதியில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கடற்படையினரும் மீனவர்களும் அருகில் சென்று பார்வையிட்டனர்.

படகில், 35 சிறுவர்களும் ஒரு கர்ப்பிணி பெண்ணும் உள்ளனர்.

படகில் உள்ள சிலர் சோர்வடைந்துள்ளனர். சிலர் மயக்க நிலையில் உள்ளனர்.

குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் அவர்களை நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

படகில் உள்ளவர்களை மீட்டுச்  செல்வதற்கு திருகோணமலையில் இருந்து கடற்படை படகு ஒன்று வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles