Thurgau கன்டோனில் உள்ள Zihlschlacht காட்டுக்குள் இருந்து 19 வயது இளைஞன் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் அவர் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு அண்மையாக மோட்டார் சைக்கிள் ஒன்றும் காணப்பட்டுள்ளது.
மோசமான காயங்களுடன் மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலதிக தகவல்கள் எதுவும் தெரியவில்லை என்று பொலிசார் கூறியுள்ளனர்.
மூலம்- 20min.