2030 ஆம் ஆண்டுக்குள் லண்டன் மற்றும் சுவிட்சர்லாந்து இடையே நேரடி ரயில் இணைப்பை ஏற்படுத்துவதற்கான உடன்பாட்டில், போக்குவரத்து அமைச்சர் அல்பர்ட் ரோஸ்டி மற்றும் பிரிட்டிஷ் அமைச்சர் ஹெய்டி அலெக்சாண்டர் ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர்.
இந்த ஆவணம் அடுத்த நடவடிக்கைகளை ஒன்றாகத் தயாரிப்பதற்கான அடித்தளத்தை அமைக்கிறது என்று ரோஸ்டி தெரிவித்துள்ளார்.
இந்த வகையான இணைப்பு சர்வதேச பொது போக்குவரத்து மற்றும் இங்கிலாந்துடனான உறவுகளுக்கு ஒரு வலுவான சமிக்ஞையை அனுப்பும் என்றும் அவர் கூறியுள்ளார்.
லண்டன்-சுவிட்சர்லாந்து பாதையின் செயல்பாட்டிற்கு எந்த அரச மானியமும் திட்டமிடப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சின் தகவல் தொடர்புத் தலைவர் தெரிவித்தார்.
எனவே இந்த திட்டம் அரசாங்கத்தின் சேமிப்புத் திட்டத்துடன் முரண்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
மூலம்- swisinfo