Basel கன்டோனில், Greifengasse இல் உள்ள Manor வணிகவளாகத்தில் நேற்றுமாலை பெருமளவு பொலிசார் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.
நடவடிக்கை இடம்பெற்றதை உறுதிப்படுத்திய பொலிசார், விபரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
Manor இன்அனைத்து நுழைவாயில்களையும் சுற்றி வளைத்த பொலிசார், ஆயுதங்களுடன் கடைக்குள் நுழைந்தனர்.
எவரும் உள்ளே வரவோ வெளியே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.
இரண்டு பெண்களை அச்சுறுத்திய ஒரு நபர் Manor இற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் கத்தி இருந்ததை பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.